ri1  ri2

பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய அதிகார சபையின் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் வாழுகின்ற 519 பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வு கடந்த 11.12.2024 .புதன்கிழமை ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் புதிய கலையரங்கத்தில் இடம்பெற்றிருந்தது. இவ் நிகழ்வானது பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப் தலைமையில் இடம்பெற்றதுடன் இவ் நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி. மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் திருமதி சரண்யா அவர்களும் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்ரகீர்த்தி உட்பட அமைச்சின் உத்தியோகஸ்தர்களால் இவ் காணி உறுதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது